உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே டிராக்டரும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் உன்னோவ் பகுதியில் ஆக்ரா மற்றும் லக்னோ இடையிலான எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் டிராக்டரும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது . இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.